பித்தா பிறை சூடீ பாடல் வரிகள் பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 1 நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன் வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 2 மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை பொன்னே, மணிதானே, வயிர ,ம், மே, பொருது உந்தி மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 3 முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ! கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 4 பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய் ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா தாது பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 5 தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ எண்ணார் புரம் மூன்றுய்ம் எரியுண்ண ,ந், நகைசெய்தாய் மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 6 ஊன் ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய்; உலகு ஆனாய் வான் ஆய்; நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய் தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 7 ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய் தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர்வான் நீர் ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 8 மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கைபங்கா! தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே செழுவார்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள் ஆரூரன்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 9
He is indeed that Glorious Being !
Sojugada ( TAMIL VERSION ) | Guna Balasubramanian | Vivek Ravichandran | Video Song |
Showing results 0 to 2 of 3