Message: #1 2024-09-27 
திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: நட்பு / Friendship
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
மு.வரதராசன் விளக்கம்:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு
கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால்
மனமும் மலரப் பழகுவதே நட்பு.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
முகம் மலர பழகும் நட்பு நட்பு இல்லை. நெஞ்சத்தே உள்முகமாய் மலர பழகுவதே நட்பு.
English Couplet 786:
Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near.
Couplet Explanation:
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells
deep in the smiles of the heart is true friendship.
Transliteration(Tamil to English):
mukanhaka natpadhu natpandru nenjaththu
akanhaka natpadhu natpu
சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:
செயல்களில் அரியது நட்புடன் இருப்பது. நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து
நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும். படிக்க இனிமையான புத்தகம் போன்றது இனிமையானவர்
நட்பு. கூடி மகிழமட்டும் இல்லாமல் குறைகளை எடுத்துக் காட்டி திருத்தவும் நட்பு அவசியம்.
உதவி கேட்காமலேயே தானாக முன்வந்து செயல்படும் நட்பே நட்பிற்கு இலக்கணம். தன்னை
உயர்வாக காட்டும் நட்பு நிலைக்காது.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர்.
தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ
வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை
அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய
காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை you tube, face book மற்றும் face book
group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
அதிகாரம்/Chapter: நட்பு / Friendship
அதிகாரம்/Chapters |