VijayramOnline Blogging
===========================================================================
Subject: -:)தமிழ்(:-முத்தமிழ் செந்தமிழ் முதுமொழி
Message: #0  2021-12-17  
இயல் (இயற்தமிழ்), இசை
(இசைத்தமிழ்), நாடகம்
(நாடகத்தமிழ்) ஆகிய
மூன்றும் தமிழ் மொழியின்
இணையான கூறுகள் என்பதை
முத்தமிழ் என்ற கருத்துக்
கோட்பாடு வெளிப்படுத்தி
நிற்கின்றது.
இம்மூன்றுக்கும்
தமிழர்கள் தந்த
முக்கியத்துவத்தையும்
முத்தமிழ் வெளிப்படுத்தி
நிற்கின்றது. மொழியை
இசையுடனும்,
நாடகத்துடனும் இணைத்துப்
பார்க்கும் கண்ணோட்டம்
பிற மொழிகளில் காணப்படாத
சிறப்பு எனலாம்.

இயல், இசை, கூத்து என்பன
முத்தமிழ். இயல் என்பது
எழுதப்படுவதும்
பேசப்படுவதுமாகிய தமிழ்.
இசை என்பது பண்ணிசைத்துப்
பாடப்படும் தமிழ். கூத்து
என்பது ஆடல்பா டல்களுடன்
உணர்த்தப்படும் தமிழ்.

ஔவையார் - அரியது, பெரியது, இனியது, கொடியது
அரியது: அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே. பெரியது: பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன் கரிய மாலோ அலைகடல் துயின்றோன் அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம் அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. இனியது: இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் அதனினும் இனிது அறிவுள் ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே கொடியது: கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய் அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே கோடி வெண்பா: மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடி பெறும். உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில் உண்ணாமை கோடி பெறும். கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும். கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
Submit your reply
===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 0 of 1608

 Print this Page
       
===========================================================================