=========================================================================== |
Subject: sweet dreams to live forever |
Message: #1 2024-04-17 Question 1. உவமையணி விளக்குக. Answer: அணி விளக்கம்: ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும். அணி அமைந்த பாடல்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. பாடல் பொருள் : பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வதுபோல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்து கொள்ள வேண்டும். அணி பொருத்தம் : பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது உவமேயம். போல’ என்பது உவம உருபு. |
=========================================================================== |
Showing results 1 to 1 of 860
Print this Page |
=========================================================================== |